உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன.
கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.
நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்பு
மற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர்
இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு,
இறுதியில் துவர்ப்பு அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும். ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது ஆரோக்கியமாக
இருக்க உதவுகிறது. ஒரே மாதிரியான சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் பலவித உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இனிப்பு சுவை மற்ற சுவைகளை விட நம் சுவை மொட்டுகளில் உடனடியாக
செயல்படுகிறது. இனிப்புப் பொருட்களை சாப்பிடும் முன்னர் எடுப்பதால், வயிறு
தொடர்பான உமிழ்வுகளின் முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது; இது செரிமான
செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, உணவை இனிப்புகளுடன் முடித்தால், அது அமிலத்துடன் வினைபுரிந்து, வயிற்று உப்புசம், அமிலத்தன்மை மற்றும்
இரைப்பை அடைப்பு போன்ற செரிமானத் தடைகளை எதிர்கொள்ள துவங்குமென சில ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இனிப்புகள் எப்போது சாப்பிடலாம் :
எப்போதும் உணவு உண்பதற்கு முன் இனிப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் சாப்பிடும் முன்னர் செரிமான
சக்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் இனிப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.
உடலில் மெதுவான வளர்சிதை மாற்றம் இருந்தால், நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணவுக்கு முன் இனிப்புகளை எடுத்து கொள்வது, உடலில் செரிமான ஹார்மோன்களை வெளியிடுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *