உடலை குளிர்விக்கும் முலாம்பழம்!
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தாகம், வியர்வை, வியர்குரு, மயக்கம் என நம் உடலை பாதிக்க ஆரம்பித்துவிடும். தாகம், வெப்பம், உடல் எரிச்சல் போன்றவற்றை இயற்கையான முறையில் எளிதில் சமாளிக்கலாம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்காற்றுகிறது.முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகசத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம், சோடியம் போன்றவை அடங்கியுள்ளன. உடலை குளிர்ச்சியூட்டும் முலாம்பழம் பல்வேறு நோய்களை தீர்க்கிறது….