தித்திக்கும் தேன்
தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….