வயிற்றைக் காக்கும் ஓமம்

*ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். *ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். *ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். *தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது. *அரை தேக்கரண்டி ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்றுவலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம்…

Read More

தயிரில் உள்ள அற்புதங்கள்!

தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். *புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். *தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது. *தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அருமருந்து. *பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் உள்ள புரோட்டீன், சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். *த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரித்து நன்மை செய்யும்…

Read More

சுரைக்காய் தரும் சுகம்!

சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை…

Read More

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காய் சாறு, தமிழரின் பாரம்பரிய சுகாதார மருந்தாக பரிசீலிக்கப்படுகிறது. இது வைட்டமின் ‘சி’யின் மிகச்சிறந்த மூலமாகும். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதன்மையாக, நெல்லிக்காய் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ளும். இது உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால், உடலின் உள்ளக உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நெல்லிக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. தினசரி உணவுகளை எளிதாகக் கைகொள்ள உதவுவதால், வாயுவாகம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன….

Read More

 தித்திக்கும் தேன்

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….

Read More

பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!

பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம். ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி…

Read More

சர்க்கரைவள்ளி கிழங்கின் பயன்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது மிதமான சுவையோடு நிறைந்த மாவுச்சத்து கொண்டது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. இது கண் பார்வை, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் குளிர்காலத்தில் சருமப் பொலிவை பாதுகாக்கவும் இக்கிழங்கு துணை…

Read More

இதயத்தை பாதுகாக்கும் 5 உணவுகள்!

ஆரோக்கியமான இதயம் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து, உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது. நமது இதயத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனென்றால், நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பு குறைக்கும் உணவுகளை…

Read More

செழுமையான வாழ்விற்குச் செல்லப்பறவை வளர்ப்பு

நம்மில் பலர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, நேசப் பறவைகள் எனப் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம். ஆனால் மேலைநாடுகளில் சிங்கம், புலி, ஆமை மற்றும் மலைப் பாம்புகளையும் செல்லமாக வளர்க்கின்றனர். தற்பொழுது தமிழகத்தில் நாய் மற்றும் பூனைக்கு இணையாகச் செல்லப்பறவைகள் வீட்டில் வளர்ப்பது பிரபலமடைந்து வருகின்றது. செல்லப் பறவைகள் வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ள தனிமையைத் தங்களது விளையாட்டுகளால் போக்கடித்துத் தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்து வளர்ப்போர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன….

Read More

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளிபலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம். ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள்…

Read More