பருத்திப்பாலின் நன்மைகள்!

பருத்திப்பால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நமது பாரம்பரிய தென்னிந்திய சத்தான பானம் ஆகும். பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகுத்தூள், ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய்த் துருவல், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில், பெரும்பாலும் விருந்தினரை வரவேற்க பருத்திப்பால் பரிமாறப்படுகிறது. பருத்திப்பாலில் வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (Anti- oxidant) நிறைந்துள்ளன. பருத்திப்பாலின் நன்மைகள் குறிந்து தெரிந்து கொள்வோம். பருத்திப்பாலின் பயன்கள் 100…

Read More

இதயத்தைக் காக்கும் கறிவேப்பிலை!

நம் உணவில் கறிவேப்பிலை கிடந்தால் அதை தூர எடுத்து வீசுவதுதான் நம் பழக்கம். ஆனால் அந்த கறிவேப்பிலையில் எவ்வளவு ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது தெரியுமா.கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு ஆன்டி – பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. நம் உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பொருளாக பெரும்பாலான உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read More

அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

அத்திப்பழம் அதன் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழம் என்றும் சொல்லலாம். இது எல்லாவிதமா சீதோசன நிலைகளிலும் வளர்க்கூடியது. மருத்துவ குணம் அதிகமுள்ள அத்திப்பழம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். அத்திப்பழத்தின் சத்துகள் அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இது ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்…

Read More

உடலை குளிர்விக்கும் முலாம்பழம்!

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தாகம், வியர்வை, வியர்குரு, மயக்கம் என நம் உடலை பாதிக்க ஆரம்பித்துவிடும். தாகம், வெப்பம், உடல் எரிச்சல் போன்றவற்றை இயற்கையான முறையில் எளிதில் சமாளிக்கலாம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்காற்றுகிறது.முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகசத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம், சோடியம் போன்றவை அடங்கியுள்ளன. உடலை குளிர்ச்சியூட்டும் முலாம்பழம் பல்வேறு நோய்களை தீர்க்கிறது….

Read More

உடல் பருமனை குறைக்கும் பப்பாளிக் காய்!

பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே கஷ்டப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற சதையை குறைத்துக் கொள்வது மிகமிக அவசியம். சதையை…

Read More

கரும்பின் மகத்துவம்

கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடுதான் கரும்பு. அது வாழ்க்கையை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்பது தெரியுமா..? அதில் பல மகத்துவம் நிறைந்துள்ளது. அவற்றை தெரிந்து கொள்ளலாம். *கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் நம் வயிற்றை சமன் செய்வதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது. *கல்லீரல் நன்கு செயல்புரிய கரும்புச்சாறு துணைபுரிகிறது. உடனடி உடம்பிற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. *சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல்,…

Read More

மண்பானை தண்ணீரின் மகத்துவம்!

வெயில் காலம் வந்துவிட்டாலே மண்பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை.பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்….

Read More

கேரட் ஜூஸின் நன்மைகள்!

கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது. தோல்: கேரட் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம்: கேரட்டில் பொட்டாசியம் உள்ளது, இது…

Read More

கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி

வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரேற்றமாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இது மலச்சிக்கல், சிறுநீர் பாதை கோளாறுகள், பசியின்மை, எடை குறைவு போன்ற பிரச்னைகளை சரிசெய்யவும், சருமத்தை குளிர்விக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உள்ளன. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல்,…

Read More

சுக்கின் மகத்துவம்!

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து லேசான சூட்டுடன் பருகினால் நீண்ட நாள் சளி தொல்லை குணமாகும். *சுக்கு, மிளகு,…

Read More