வாஸ்து: மனநிலையை வர்ணங்கள் நிர்ணயிக்கும் என்பது உண்மையா…?

நம் கண்கள் வர்ணங்களைப் பார்க்கும்பொழுது, நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் நமக்கு ஒவ்வொரு வர்ணத்தைப் பார்க்கும் பொழுதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உண்டாகின்றன. பூந்தோட்டங்களைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி, நீர் வீழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது கிடைக்கின்ற புத்துணர்வு என மனநிலையில் பல்வேறு வகை உணர்வுகள் தோன்றுகின்றன. இது போன்ற உணர்வுகள் நம் வீட்டிலும் நமக்கு ஏற்படுகின்றது. நம் வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு உணர்வு நிலை…

Read More

வாஸ்து முறைப்படி இவ்வாறு செய்வதால் பணக்காரராக முடியுமா…?

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க  வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள…

Read More

ஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா…?

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை  வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத்…

Read More

அக்னி மூலையில் இந்த பொருட்களை வைக்கவே கூடாது; அது என்ன…?

அக்னி மூலை – தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணெய், எரிவாயு, போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும்,  அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில்…

Read More

மேற்கு பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது பின்பற்ற வேண்டியவைகள்!!

வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர். மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும்போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனைபடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும். மேற்கு பார்த்த மனைகளை கட்டும்போது வருண பகவான் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். எனவே அத்திசையின் கடவுளை அனுசரித்து வீட்டை அமைக்கும் போது…

Read More

வாஸ்துவில் பார்க்கப்படும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்….!!

கிழக்கு –  சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறிந்த நமது முன்னோர்கள் இத்திசை  “சூரிய நமஸ்காரம்” செய்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும். மேற்கு – சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும். வடக்கு – சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய…

Read More

வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை விரட்டும் பரிகாரங்கள்…!

எல்லா வீடுகளும் வாஸ்து விதிப்படி கட்டப்படுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி சில வீடுகள் வாஸ்து விதிகள் பின்பற்றபடாமல் கட்டப்படுவதால், வீட்டிற்கு வாஸ்து தோஷம் ஏற்பட்டு அங்கு வசிப்பவர்களுக்கு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்துகிறது. வீட்டில் இருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் வெளியேறவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வீட்டின் வாயிற்படியின் மேலாக ஒரு செம்பு கம்பியை நீளவாக்கில் கட்டி, அதில் புதிய மாவிலைகளை தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டும். வீட்டிற்கு வெளிப்புறமாக நெற்கதிர்களை கட்டவேண்டும். அவ்வாறு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் நெற்கதிர்களை பலவிதமான…

Read More

வாஸ்து பகவான் எப்படி உருவானது; புராணக்கதை…!!

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது.  மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான்…

Read More

வீட்டின் படுக்கை அறையின் ஜன்னல்கள் வாஸ்து முறைப்படி எங்கு அமைப்பது நல்லது…?

எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும். மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும். 4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்  சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும். படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும்,…

Read More

கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது…?

வாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. வீட்டின் கழிவறை ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து  கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு…

Read More